சிறையிலிருந்து வெளிவர அன்வாருக்கு நாளை கடைசி வாய்ப்பு

anwarகுதப்புணர்ச்சி II குற்றச்சாட்டை     நீதிமுறை   மேலாய்வு    செய்யக்கோரி  பிகேஆர்    நடப்பில்    தலைவர்  அன்வார்  இப்ராகிம்  செய்துகொண்ட   விண்ணப்பம்மீது    கூட்டரசு    நீதிமன்றம்     நாளை   தீர்ப்பளிக்கும்.

மலாயா   தலைமை  நீதிபதி    சுல்கிப்ளி    அஹமட்  மகினுடின்   தலைமையில்   ஐவரடங்கிய    நீதிபதிகள்  குழு    அத்தீர்ப்பை   வழங்கும்.

அக்குழுவில்   இடம்பெற்றுள்ள   மற்ற   நீதிபதிகள்:  சாபா,  சரவாக்  தலைமை   நீதிபதி    ரிச்சர்ட்  மலாஞ்சும்,   நீதிபதி     ஹசன்  லா,   நீதிபதி    அபு   சாமா  நோர்டின்,  நீதிபதி    ஸஹாரா  இப்ராகிம்.

குதப்புணர்ச்சி    வழக்கில்    ஏற்கனவே   கூட்டரசு     நீதிமன்றம்    அளித்த   ஐந்தாண்டுச்  சிறைத்தண்டனையிலிருந்து     வெளிவர    அன்வாருக்குள்ள   கடைசி    வாய்ப்பு   இதுவாகும்.