பிரிமுக்கு முன் வாங் ஏஹ்சான் இருந்ததை மகாதிருக்கு நினைவுபடுத்துகிறார் சாலே

brimபந்துவான்  ரக்யாட்   1மலேசியா(பிரிம்)   உதவித்   தொகை   வழங்கப்படுவது   ஊழல்  என்று   முன்னாள்    பிரதமர்   டாக்டர்   மகாதிர்    முகம்மட்   கூறுவது    வியப்பளிப்பதாகக்  கூறுகிறார்    சாலே  சைட்   கெருவாக்.  ஏனென்றால்   மகாதிர்      பிரதமராக  இருந்தபோது   அவரும்    இப்படிப்பட்ட   திட்டங்களைக்  கொண்டு  வந்ததுண்டு  என்றாரவர்.

மகாதிர்   திரெங்கானுவுக்கு    Wang Ehsan  வழங்கியதை   அவர்   நினைவுக்குக்  கொண்டு  வந்தார்.

2,000ஆம்   ஆண்டில்   கூட்டரசு   அரசாங்கம்   எண்ணெய்  உரிமப்பணத்துக்குப்  பதிலாக   வாங்  எஹ்சான்    என்ற    ஒன்றை  வழங்கியது.  அப்பணம்   பிரிம்    உதவித்   தொகையைப்  போலவே   மக்களுக்கு    உதவியளிக்கப்   பயன்படுத்திக்  கொள்ளப்பட்டது.

திரெங்கானு   1999-இலிருந்து  2004வரை    பாஸின்   ஆட்சியில்   இருந்தது.

“2000-இல்  வாங்   எஹ்சான்,  திரெங்கானு   உதவித்   திட்டம்    ஆகியவற்றை   வழங்கியவர்  இப்போது  பிரிமைக்  கண்டனம்   செய்கிறார்.

“அப்படியானால்,   எதிரணி     ஆட்சிக்கு    வந்தால்   எல்லா     உதவிகளும்   மக்கள்நலத்   திட்டங்களும்    அடியோடு   ஒழிக்கப்படும்    என்கிறாரா  மகாதிர்.  மகாதிர்  இதைத்   தெளிவுபடுத்த    வேண்டும்”,  என   சாலே   ஓர்     அறிக்கையில்   கூறினார்.