பிரிம் ஒருவகை ஊழல் என்பதை வான் அசிசா ஒப்புக்கொள்ளவில்லை

pakatanமுன்னாள்  பிரதமர்   டாக்டர்   மகாதிர்   முகம்மட்   பந்துவான்   ரக்யாட்    1மலேசியா( பிரிம்  உதவித்  தொகை)  ஒருவகை   ஊழல்    என்று  கூறியிருப்பதை    எதிரணித்    தலைவர்   டாக்டர்   வான்   அசிசா   வான்   இஸ்மாயில்   மறுக்கிறார்.

“அரசாங்கம்   மக்களுக்குக்  கொடுக்கும்   எதுவும்    மக்களிடமே   கொடுக்கப்பட  வேண்டும்,  அது   ஊழலாகாது.  அதைப்  பெற   மக்களுக்கு  உரிமை    உண்டு”,  என  வான்  அசிசா   இன்று   பெட்டாலிங்   ஜெயாவில்   செய்தியாளர்    கூட்டமொன்றில்    தெரிவித்தார்.

மகாதிர்  பிரிம்   உதவித்   தொகை   “ஊழலானது”   என்றும்   அது  “சட்டவிரோதமானது”   என்றும்   கூறியிருந்தார்.

மகாதிரின்   அவ்வாறு   குறிப்பிட்டது    ஹராபான்,     பார்டி   பிரிபூமி   பெசத்து  மலேசியா(பெர்சத்து)   கூட்டணியைப்   பாதிக்குமா   என்று  வினவியதற்கு   அது  மகாதிரின்   கருத்து   அவ்வளவுதான்    என்று   வான்  அசிசா   கூறினார்.