பேருந்து கட்டணத்தை உயர்த்துவது பேருந்து விபத்துகளைக் குறைக்கும் என நிலப் போக்குவரத்து ஆணையம் (ஸ்பாட்) கூறியிருப்பதற்கு மலேசிய பயனீட்டாளர் சங்கம் (மாகோனாஸ்) எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
“அன்றாடத் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் மக்கள் அல்லல் பட்டுக்கொண்டும் விலைவாசி உயர்ந்து கொண்டும் போகும் நடப்புப் பொருளாதாரச் சூழலில் பேருந்து கட்டணத்தை உயர்த்துவது சரியாகாது.
“கூடுதல் சம்பளம் கொடுப்பதால் விபத்துகள் குறையும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை”, என அச்சங்கத்தின் தலைவர் அமர்ஜிட் சிங் ஓர் அறிக்கையில் கூறினார்.
கூடுதல் சம்பளம் கொடுத்தால் பேருந்து ஓட்டுனர்கள் அடிக்கடி பயணத்தில் ஈடுபட மாட்டார்கள் என்பதல்ல.
ஓட்டுனர்கள் எத்தனை தடவை பயணத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதை பேருந்து நிறுவனங்கள் கவனிக்க வேண்டும்.
“ஒரு நாளில் இத்தனை மணி நேரம்தான் பேருந்து ஓட்டலாம் என்பதற்கு வரைமுறை இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் ஓட்டலாம். இடையில் இரண்டு மணி நேரம் இடைவெளி இருத்தல் வேண்டும்”, என மகானோஸ் தலைவர் கூறினார்.

























பணத்தை (சம்பளத்தை) உயர்த்தினால் பணத்துக்கு ஆசைப்பட்டு இன்னும் அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்று அதிகமாக ஓடுவார்கள். சம்பளத்தை உயர்த்தியதும் ________ அதிகமாக லஞ் சம் கேட்கிறார்களே அது மாதிரி தான் இதுவும்…சம்பள உயர்வை விட்டு விட்டு விபத்துக்கள் நடக்க காரணங்களை ஆராயுங்கள். அதற்குத்தானே ஸ்பாட் அமைக்கப்பட்டது? உங்க வேலைய உருப்படியா செய்யுங்க..முடியலேன்னா வேலை செய்ய திறமை உள்லவங்க கிட்ட பதவிய விட்டுக் கொடுத்துட்டு போய் சுகமா தூங்குங்க..
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் இரவு வேளைகளில் கார் ஓட்டவே அச்சமாக இருக்கிறது காரணம் பல இடங்களில் சாலை விளக்குகள் இல்லை…இருளில் எப்படி கார் வாகனம் ஓட்டுவது?
KESAS நெடுஞாலையில் ஓடும் கனரக லாரிகள் (Container) மணிக்கு 120 முதல் 140 கி.மீ வரை அதிவேகமாக ஓட்டுகிறார்கள் இது மற்ற வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்துலாகவும் அடியூறாகவும் இருக்கிறது…அவர்களை போய் முதலில் பிடியுங்கள்.
பேருந்து ஓட்டுனர்கள் தூங்கிய பின் இரவு வேளைகளில் வாகனம் ஓட்ட வேண்டும். அதை உறுதி செய்ய வேண்டும். அத்துடன் ஒழுங்கான சம்பளம் கொடுக்க வேண்டும். கட்டணம் மட்டும் உயர்த்துவதால் ஒன்றும் ஆக போவது கிடையாது. குடித்துவிட்டு ஓட்ட கூடாது. ஒழுங்கான பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
பிரச்சனை என்ன ? விபத்துக்களை தவிர்ப்பது எப்படி என்பது போன்ற
ஆலோசனைகளை , ஆக்ககரமான வழிகளை ஆராயாமல்
அரை வேக்காட்டுத்தனமாக அறிக்கை விடுவதில் வல்லவரகள்
இந்த ஸ்பார்ட் ( ஸ்பாட்
விபத்துக்களை குறைக்க ஆக்ககரமான வழிகளை ஆராயாமல்
அரை வேகட்டுத்தனமாக ஆலோசனை வழங்குவதில் வல்லவர்கள்
இந்த ஸ்பார்ட் அதிகாரிகள் ! வாகனத்தை பாதுகாப்பாக செலுத்துங்கள் என அறிவுரை கூறும் இவர்கள் ; பாதுகாப்பான முறையில் சாலை இருக்கிறதா என்பது பற்றி கவனத்தில் எடுத்துக்கொள்வது இல்லை !
0