எஸ்ஆர்சி புலனாய்வில் சம்பந்தப்பட்ட ஆறு எம்ஏசிசி அதிகாரிகள் இடமாற்றம்

macc மலேசிய   ஊழல்தடுப்பு   ஆணையத்தின்   சிறப்பு    நடவடிக்கைப்   பிரிவு (Bahagian Operasi Khas) அதிகாரிகள்    அறுவர்   அப்பிரிவிலிருந்து    மாற்றப்பட்டிருக்கிறார்கள்.   அவர்கள்  அனைவருமே   எஸ்ஆர்சி   இண்டர்நேசனல்     புலனாய்வில்   நேரிடையாக   ஈடுபட்டவர்கள்   என்பது  குறிப்பிடத்தக்கது.

அந்த   அறுவரில்    அப்பிரிவின்  துணைத்   தலைவர்   டான்  காங்    சாயும்   ஒருவர்  என்று    அறியப்படுகிறது.

சிறப்புப்   பிரிவு   ரிம1 மில்லியனுக்கு  மேற்பட்ட     ஊழல்களை  விசாரிப்பதற்காக   2010-இல்   அமைக்கப்பட்டது.