தலைமைச் செயலாளர் கைதானார், சரி ஆனால் எஸ்ஆர்சி-இல் யாரும் கைதாகவில்லையே, ஏன்? பாஸ் கேள்வி

pasஓர்   அமைச்சின்   தலைமைச்   செயலாளரைக்  கைது   செய்ததன்வழி   மலேசிய  ஊழல்   தடுப்பு   ஆணையத்தின்   முன்னாள்    அதிகாரி   பாஹ்ரி  முகம்மட்  சின்னின்   பரபரப்பூட்டும்    செய்தியால்   ஏற்பட்டுள்ள    கவலையை –   முடிவுக்குக்  கொண்டு   வந்துவிட   முடியாது   என்கிறார்   பாஸ்  துணைத்    தலைவர்    துவான்   இப்ராகிம்   துவான்   மான்..

எஸ்ஆர்சி   இண்டர்நேசனல்    நிறுவனத்தை    நீதிமன்றத்துக்குக்   கொண்டு   செல்லாதது    மலேசியர்களுக்குத்   தாம்  இழைத்த   மிகப்  பெரிய  என்று  பாஹ்ரின்   கூறியிருந்தது   பலவாறும்  நினைக்க   வைத்தது.   நேற்றைய  கைது    பாஹ்ரினின்   கூற்றை    வலுப்படுத்துகிறது    என்று  துவான்  இப்ராகிம்   கூறினார்.

“மலேசிய   உழல்தடுப்பு    ஆணையத்தால்   அரசு   அதிகாரிகளை   எளிதாகக்  கைது     செய்ய    முடிகிறது,    ஆனால்   உயர்   அரசியல்வாதிகள்    சம்பந்தப்பட்ட    எஸ்ஆர்சிக்கு   எதிராக   எதுவும்   செய்ய    முடியாதது    ஏன்?

“பாஹ்ரி    முன்வைத்த   குற்றச்சாட்டுகள்   உண்மையாயின்   எஸ்ஆர்சி   வழக்கு (நீதிமன்றம்  செல்வதைத்)  தடுத்தது    யார்?….தலைமைச்   செயலாளரைக்  கைது    செய்ய  பச்சைக்  கொடி   காட்டியது   யார்?”,  என   துவான்  இப்ராகிம்   ஓர்    அறிக்கையில்   வினவினார்.