அமைச்சின் தலைமைச் செயலாளரும் இரு மகன்களும் ஏழு நாள் தடுத்து வைக்கப்பட்டனர்

caseபுத்ரா  ஜெயா   மெஜிஸ்திரேட்   நீதிமன்றம்    ஓர்   அமைச்சின்    தலைமைச்   செயலாளரையும்    அவரின்   மகன்கள்  இருவரையும்   விசாராணைக்காக   ஏழு    நாள்களுக்குத்   தடுத்து    வைத்தது.

அரசு   உயர்   அதிகாரி   அவரின்  34,  29  வயது   மகன்களுடன்   காலை   மணி   9.38க்கு    நீதிமன்றம்   வந்தார்.

அவர்களை   செக்‌ஷன்   117-இன்கீழ்   14   நாள்   தடுத்து   வைக்க   அரசுத்தரப்பு   வழக்குரைஞர்  அஹ்மர்   அக்ராம்   நீதிமன்றத்தைக்    கேட்டுக்கொண்டார்.

ஆனால்,  நீதிபதி   நிக்   இஸ்ஃபானி  தஸ்னிம்  வன்  அப்   ரஹ்மான்    ஏழு   நாள்களுக்கு  மட்டுமே  அவர்களைத்   தடுக்க  வைக்க   உத்தரவிட்டார்.

தலைமைச்   செயலாளர்,  அதிகாரமீறல்,   கையூட்டு   உள்பட  பல  குற்றங்களுக்காக    நேற்று   அவரது   வீட்டில்  கைது    செய்யப்பட்டார்.

அவரின்  மகன்கள்   இருவரும்    அவருக்கு   உடந்தையாக    இருந்தார்கள்    என்று   சந்தேகிக்கப்படுகிறது.