டத்தாரான் மெர்தேக்காதான் வேண்டும், பாஸ் பிடிவாதம்

 

Pasadamantபாஸ் கட்சியின் சட்டம் 355 பேரணியை எங்கே நடத்துவது என்று சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் பேசுவதற்கு பாஸ் கட்சி ஒரு கூட்டம் ஒன்றை நடத்தவிருக்கிறது.

“நாங்கள் முதலில் கூடுவோம். மிகக் குறுகிய காலத்தில் கூடுவோம். பெப்ரவரி 18 இல் டாத்தாரான் மெர்தேக்காவில் கூட்டம் நடத்துவதர்கான எங்களுடைய மனுவுக்கான டிபிகேஎல்லின் பதிலுக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம்.

கூட்டரசுப் பிரதேச அமைச்சர் கு நான் பாஸ் பேரணியை தித்திவங்சா அரங்கத்தில் நடத்தும்படி கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு “முடிந்தால், டாத்தாரான் (மெர்தேக்காவில்) நடத்த விரும்புகிறோம்” என்று பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான்.

டாத்தாரான் மெர்தேக்காவில் பேரணியை நடத்துவதற்கு அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறோம். அது உண்மையிலேயே சாத்தியமில்லை என்றால், அதன் பிறகு வேறு இடம் பார்ப்போம் என்று துவான் இப்ராகிம் மேலும் கூறினார்.