துங்குவின் 114 ஆம் ஆண்டு நிறைவு நாளைக் கொண்டாட ‘மலேசியாவைப் பாதுகாப்போம் வட்ட மேசை’ விவாதம்

tunku-abdul-rahman-12மலேசியாவின் முதலாவது பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மானின் 114 ஆம் ஆண்டு நிறைவு நாளைக் கொண்டாட பெப்ரவரி 8 இல் ‘மலேசியாவைப் பாதுகாப்போம் வட்ட மேசை’ விவாதத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அழைப்புகள் அனுப்பப்படும்.

நாட்டை அழிவிலிருந்து எப்படி காப்பாற்றுவது என்பது பற்றி விவாதிக்க அரசியல் மற்றும் சிவில் சமுதாயத் தலைவர்கள் அழைக்கப்படுவர் என்று டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறினார்.

மலேசியா ஒரு தோல்வி கண்ட நாட்டை நோக்கி சென்றுகொண்டிருப்பது துங்குவை திடுக்கிடச் செய்யும் என்று தாம் நம்புவதாக லிம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

இந்த வட்ட மேசை விவாதத்திற்கு பிரதமர் நஜிப்பும் அழைக்கப்படவிருக்கிறார்.

பிஎன் கட்சிகள் தலைவர்கள் லியோ தியோங் லாய் (மசீச), மா சியு கியோங் (கெராக்கான்), டாக்டர் எஸ். சுப்ரமணியம் (மஇகா) ஆகியவருடன் மற்றவர்களும் அழைக்கப்படுவர்.

எதிரணித் தலைவர்கள் டாக்டர் வான் அஸிசா (பிகேஆர்), டாக்டர் நாசிர் ஹசிம் (பிஎஸ்எம்), முகமட் சாபு (அமனா), டாக்டர் மகாதிர் (பெர்சத்து), ஹாடி அவாங் (பாஸ்) ஆகியோருக்கும் அழைப்பு உண்டு என்றார் லிம்.