வார்ட் கட்டண உயர்வால் ஏழை மக்களுக்குப் பாதிப்பில்லை

dr subraஅரசாங்க     மருத்துவமனைகளின்   கட்டண   உயர்வால்   ஏழை   மக்கள்    பாதிக்கப்பட    மாட்டார்கள்     எனச்  சுகாதார   அமைச்சர்   டாக்டர்   எஸ். சுப்ரமணியம்    உத்தரவாதம்     அளித்துள்ளார்.

ஏனென்றால்,  மூன்றாம்  வகுப்பு   வார்ட்   கட்டணம்   ஒரு   நாளைக்கு   ரிம3-தான்  அதில்  மாற்றமில்லை     என்றாரவர்.

முதல்,  இரண்டாம்   வகுப்பு     வார்ட்   கட்டணங்கள்    நீண்ட   காலமாக   மாற்றமின்றியே    இருந்து    வந்துள்ளன.    எனவேதான்      அவற்றை     மாற்றி   அமைக்க   அமைச்சரவை    முடிவு     செய்தது      என்றாரவர்.

ஜனவரி    முதல்    தேதியிலிருந்து   முதல்  வகுப்பு   வார்ட்  கட்டணம்  ரிம30-இலிருந்து    ரிம45  ஆகவும்      இரண்டாம்    வகுப்பு    கட்டணம்   ரிம20-இலிருந்து  ரிம25  ஆகவும்    உயர்ந்துள்ளது.