விலைகளை உயர்த்தாதீர்: ஜாலான் அலோர் வியாபாரிகளுக்கு தெங்கு அட்னான் கோரிக்கை

adnanஜாலான்   அலோர்  வணிகர்களும்    அங்காடி   வியாபாரிகளும்   அங்கு  சுற்றுப்பயணிகள்   அதிகம்   வருவதைப்  பயன்படுத்திக்  கொண்டு   பொருள்  விலைகளை   உயர்த்தக்  கூடாது.

அப்படிச்   செய்தால்   பெட்டாலிங்   ஸ்திரிட்   நிலைதான்    அதற்கும்  நேரும்   என்று கூட்டரசுப்   பிரதேச   அமைச்சர்   தெங்கு   அட்னான்   தெங்கு   மன்சூர்   கூறினார்.  பெட்டாலிங்   ஸ்திரிட்டுக்குச்    சுற்றுப்பயணிகளின்   வருகை   குறைந்து   கொண்டு    வருவதை    அவர்   சுட்டிக்காட்டினார்.

“வியாபாரிகள்    சுற்றுப்பயணிகளைப்  பயன்படுத்திக்   கொண்டு   பொருள்  விலைகளைக்   காரணமில்லாமல்  உயர்த்த  மாட்டார்கள்   என   நம்புகிறேன்.   நாட்டின்   நற்பெயரையும்    ஜாலான்  அலோரின்  பெயரையும்   காப்பதற்கு  அது   அவசியம்.

“சுற்றுப்பயணிகள்   திரும்பவும்   வர   வேண்டும்.  நாடு  திரும்பிச்   செல்லும்    அவர்களே     நம்    நாட்டின்   குட்டித்   தூதர்கள்”,  என்றாரவர். தெங்கு   அட்னான்   நேற்றிரவு   கூட்டரசுப்   பிரதேச   புக்கிட்   பிந்தாங்   விழாவைவைத்   தொடக்கி  வைத்த  பின்னர்   செய்தியாளர்களிடம்   பேசினார்