மலாக்கா டிஏபி சட்டமன்ற/நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் கட்சி விலகல்

dapமலாக்காவில்  டிஏபி   சட்டமன்ற/நாடாளுமன்ற  உறுப்பினர்கள் நால்வர்   அக்கட்சியிலிருந்து   விலகிக்  கொண்டிருப்பதாக   ஓரியெண்டல்   டெய்லி   ஆன்லைன்   இன்று    அறிவித்தது.

கோட்டா   மலாக்கா    எம்பி  சிம்   தோங்  ஹிம்,   டுயோங்    சட்டமன்ற    உறுப்பினர்    கோ   லியோங்    சான்,   பாச்சாங்    சட்டமன்ற    உறுப்பினர்    லிம்  ஜாக்  வொங்,  கெசிடாங்   சட்டமன்ற    உறுப்பினர்   சின்  சூங்   சியோங்   ஆகிய    அந்நால்வரும்  இன்று     செய்தியாளர்    கூட்டமொன்றில்    தங்கள்    முடிவை    அறிவித்ததாகக்  கூறப்பட்டது.

ஓரியெண்டல்   டெய்லியின்    செய்தியுடன்    செய்தியாளர்   கூட்டத்தின்   காணொளி   ஒன்றும்  இணைக்கப்பட்டிருந்தது.

தங்கள்   முடிவு    உடனடியாக     நடப்புக்கு    வருவதாகத்     தெரிவித்த     அந்நால்வரும்,  டிஏபி   அதன்   தொடக்கக் காலக்  குறிக்கோளைவிட்டு    விலகிச்   சென்றுவிட்டதாகவும்    அதுவே   தங்கள்    முடிவுக்குக்   காரணம்    என்றும்   கூறினர்.

அவர்களின்   விலகலால்  மலாக்காவில்    இப்போது   டிஏபிக்கு   மூன்று    சட்டமன்ற    உறுப்பினர்கள்    மட்டுமே   உள்ளனர். எம்பி   எவரும்  இலர்.