நாடு அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் திகழ்வதை உறுதிப்படுத்த மலேசியர்கள் மிதவாதத்தையே எப்போதும் கடைப்பிடித்து வர வேண்டும் என்கிறார் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக். அப்போதுதான் அரசாங்கத்தால் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பல்வேறு திட்டங்களையும் வகுக்க முடியும்.
மிதவாதம் இருந்தால் மட்டுமே நாட்டின் பல்லினங்கள் தடைகளும் சச்சரவும் இன்றி ஒன்றுபட்டிருக்கவும் தத்தம் சமயங்களையும் பண்பாடுகளையும் பின்பற்றவும் முடியும் என்றாரவர்.
“இந்நாட்டில் தீவிரவாதம் இல்லை. மிதவாதமே உண்டு. இஸ்லாமும் மிதவாதத்தையே வலியுறுத்துகிறது.
“சமயம்தான் வேறே தவிர, பெளத்தத்திலும் அக்கோட்பாடு உண்டு. இப்போதைய பிரச்னகளுக்கு சமயங்கள் காரணமல்ல, சமயங்களில் தீவிரவாதிகள் இருப்பதே காரணம்”, என்றார்.
பெந்தோங் சதுக்கத்தில் 2017 மலேசிய சீனப் புத்தாண்டுத் திறந்த இல்ல உபசரிப்பைத் தொடக்கி வைத்தபோது நஜிப் இவ்வாறு பேசினார். அந்நிகழ்வில் அவரின் துணைவியார் ரோஸ்மா மன்சூரும் கலந்து கொண்டார்.
யார் எதைப் பேசவேண்டும் என்ற தராதரம் வேண்டாமா ? இவர்களது சிம்மாசனம் மக்களை மடையர்கள் என்று நினைக்க வைக்கிறது . நாட்டின் கருவூலத்தில் கைவைக்காமல் , முறையாக நிர்வகித்தாலே , மக்களின் வாழ்க்கைத் தரம் பற்றி அலட்டிக்கொள்ள அவசியமில்லை . மக்களுக்கு தீவிரவாத உணர்வை ஏற்படுத்துவதே அரசியல்வாதிகள்தான் ! நாட்டை வறுமை நிலைக்கு இட்டுச்செல்வதும் தீவிரவாதமே .
பெரியண்ணே…அது மட்டுமா?
எங்க நாட்டில் சாலை விபத்துக்கள் கிடையாது.
எங்க நாட்டில் திருட்டு பயம் கிடையாது.
எங்க நாட்டில் வழிப்பறி கிடையாது
எங்க நாட்டில் ஊழல் கிடையாது.
எங்க நாட்டில் அடக்கு முறை கிடையாது.
எங்க நாட்டில் தடுப்புக் காவல் மரணம் கிடையாது
எங்க நாட்டில் கற்பழிப்புக் கிடையாது.
இந்த மாதிரி எங்க நாட்டில் எத்தனையோ கிடையாதுகள்…புரிந்து கொள்ளுங்கள் உலகமக்களே..
இல்லை! அம்னோ தீவிரவாதமே உண்டு!
இது எதனை காட்டுகிறது? பெரும்பாலான “அவன்” மக்களுக்கு சிந்திக்கும் திறன் இல்லை என்பதே –அதனால் தான் இப்படி கொள்ளை அடித்தும் “அவன் ” மக்களுக்கு தெரிந்தும் தெரியாமல் இருக்கிறது– எல்லாம் ஊழலின்,இன வாதத்தின் மகிமை.
மலேசியாவில் இன தீவிரவாதத்தை தூண்டுவதே உங்க அம்னோக்காரங்கதான் அதை தெரிந்தும் தெரியாதது போல பேசுறிங்கலே எப்ப்டி…?
அனைத்தும் அம்னோ செய்கிறதே அதுவே போதும் !