நான்கு டிஎபி பிரதிநிதிகள் கட்சியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து கிட் சியாங்கும் குவான் எங்கும் நாளை மலாக்கா செல்கின்றனர்

 

KitandGuantoMelakaதேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு டிஎபி பிரதிநிதிகள் கட்சியிலிருந்து விலகிக் கொண்டதைத் தொடர்ந்து கட்சியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கும் கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்கும் நாளை மலாக்காவுக்குச் செல்கின்றனர்.

நாளை முழுவதும் கிட் சியாங் மக்களைச் சந்திக்கிறார். அதன் பின்னர் இரவில் கட்சி உறுப்பினர்களுடன் கூட்டம் நடத்துகிறார். குவான் எங் கட்சித் தலைவர்களை இரவில் சந்திக்கிறார்.

இந்த நால்வரின் விலகல் மலாக்கா சட்டமன்றத்தின் டிஎபி உறுப்பினர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைத்து விட்டது. ஆக, இந்த வருகையின் நோக்கம் இவர்களில் விலகலால் ஏற்பட்டுள்ள தாக்கத்தை கண்டறிவதாகும் என்று நம்பப்படுகிறது.