ஏதாவது வித்தைகளைக் கையாண்டு பொதுமக்களிடையே விளம்பரம் தேடிக் கொள்வதில் கில்லாடியான சுங்கை புசார் அம்னோ தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ் இன்று ஒரு டஜன் காலி பிணப்பெட்டிகளுடன் சிலாங்கூர் செயலகத்துக்குமுன் ஆர்ப்பாட்டத்தில் இறங்கி பதற்றத்தை உண்டு பண்ணினார்.
சிலாங்கூர் மூத்த குடிமக்களின் ஈமச் சடங்குகளுக்கு உதவும் நிதியான “Skim Mesra Usia Emas” (எஸ்எம்யுஇ)-இல் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாகக் கூறி அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவே அந்த ஆர்ப்பாட்டம் என்றவர் சொன்னார்.
அப்போது அங்கு, பலர் சூழ ஜமாலின் முன் சென்ற ஓர் ஆடவர், அவரது கோமாளித்தனங்களைக் கண்டு மக்கள் சலிப்படைந்து விட்டதாகக் கூறினார்.
அதனால் ஆத்திரமடைந்த ஜமால் “என்னோடு ஒண்டிக்கு ஒண்டி வருகிறாயா” என்று உடலை முறுக்கிக்கொண்டு நிற்க, நல்ல வேளையாக எதுவும் நடப்பதற்குமுன் போலீசார் தலையிட்டு இரு தரப்பினரையும் தடுத்தனர்.
ஜமாலை எதிர்த்தவர்கள் தங்களை சிலாங்கூர் அரசின் ஆதரவாளர்கள் என்று கூறிக் கொண்டனர்.
முன்னதாக, ஜமால் தமதுரையில் இறப்பு உதவி நிதிக்காக ஒதுக்கப்பட்ட ரிம200 மில்லியனை மாநில பிரதிநிதிகள் வேறு நோக்கங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டிருப்பதாகக் கூறினார்.
“நான் யாரையும் குற்றம் சாட்ட வரவில்லை. விளக்கம் கேட்கவே வந்தேன்”, என்றாரவர்.

























உண்மையான பைத்தியத்தை வெளியே நடமாட விட்டுட்டு,சிறையில் நன்றாக இருக்கும் கைதிகளை பைத்தியம் சொந்தமாக இறக்கிறார்கள் என்று கூருவது எப்படி ?
நீங்கள் விளக்கம் கேட்கும் முறை மிகவும் நன்றாக இருக்கிறது….
நாட்டுக்கு வாய்த்த புல்லுருவி இவன். இவன் மேல் இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று புரிகிறது.
இதே மாதிரி பெரியண்னன் அடித்த கொள்லைக்கும் யாராவது இந்த வகையில் ‘நீதி’ கேட்டிருந்தால் இந்நேரம் அதோ கதி தான்..நல்ல நாடு நல்ல சட்டம்..
இந்த கம்மனாட்டிக்கு அவன் அம்னோ நாதாரிகள் பண்ணும் ஊழல்கள் கண்ணுக்கு தெரியாதா? எல்லாம் நம்பிக்கை நாயகனின் பணம் பாய்கிறது.
வேறு நலன்களுக்கு என்றால் இவனுக்கு ஏன் கூப்பாடு .- மகா கொள்ளைக்காரர்கள் இவனுக்கு தெரியாதா ? -அங்கே சவ பெட்டியை கொண்டு போக வேண்டியதுதானே .- போலீசார் அவனை வேடிக்கை பார்க்கும் வரை ,இவனுக்கு பைத்தியம் பிடிக்கும் காலம் நெருங்கிவிட்டது -நல்ல மதத்தினர் செய்யும் காரியமா இது?-
இந்த வித்தையெல்லாம் நாங்கள் பண்டிதன் காலத்திலேயே பார்த்திட்டோம் ! இந்த முட்டாள்களுக்கு காப்பி அடிப்பதே வேலையாகிவிட்டது.
அன்றாட வாழ்க்கையில் சோர்விழந்த மக்களுக்கு அரசியலில் அவ்வப்போது நல்லத் தரமானக் கலை நிகழ்ச்சிகளை தயாரித்து நடத்திக் கொண்டு மக்களை சிரிக்க வைக்கும் இவரை தயவுச் செய்து யாரும் இனிமேல் சாட வேண்டாம். நம் தொலைக் காட்சி நிகழ்ச்சியான “ஆதித்தியா”வும் இவரிடம் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும்.
சுங்கை பெசார் தமிழர்களேஹ் சற்று சிந்திக்கவும் ப்ளீஸ் இந்த mudtalugu