அஸலினா: எதற்கெடுத்தாலும் குரல் கொடுக்கும் கிட் சியாங் அன்னிய செலாவணி பணிக்குழுவுக்கு உதவ வேண்டும்

azalinaடிஏபி    மூத்த    தலைவர்     லிம்   கிட்  சியாங்    இரண்டு   தசாப்தங்களுக்கு   முன்னர்    பேங்க்  நெகாரா    மலேசியாவில்   ஏற்பட்ட    அன்னிய    செலாவணி    இழப்பைப்    புலனாய்வு    செய்ய   அமைக்கப்பட்டுள்ள    சிறப்புப்    பணிக்குழுவுக்கு  உதவ     முன்வர   வேண்டும்  என்கிறார்    பிரதமர்துறை   அமைச்சர்   அஸலினா   ஒத்மான்    சைட் .

“பார்க்கப்போனால்,   அவர்தான்   பணிக்குழுவுக்கு    ஆதரவு  தெரிவிக்கும்   முதல்   ஆளாக   இருக்க   வேண்டும்.

“ஏனென்றால்,   1990-களில்    அது  குறித்து   நிறைய   பேசியவர்,  பல   தீர்மானங்களைக்  கொண்டு  வந்தவர்  அவர்”.

1993-லிலும்  1994-இலும்    அவர்   கொண்டு  வந்த    தீர்மானங்களில்     உண்மைகள்    இருக்குமானால்    அதை   நிரூபிக்க    இப்போது   அவருக்கு    அருமையான   வாய்ப்பு   கிடைத்துள்ளது     என்று   குறிபிட்ட   அஸலினா,   அவர்  பணிக்குழுவிடம்   சம்பந்தப்பட்ட   உண்மைகளைத்   தெரிவிக்க   வேண்டும்   என்றார்.

பேங்க்   நெகாராவுக்கு   ஏற்பட்ட  இழப்பு   எவ்வளவு,   அதை  மூடிமறைக்க   முயற்சிகள்    நடந்ததா    என்பதை   ஆராய   சிறப்புப்    பணிக்குழு   அமைக்கப்பட்டிருப்பதாக    பிரதமர்துறை   புதன்கிழமை   அறிவித்தது