நாடு முழுவதும் வாக்காளர் பதிவு இயக்கம்: பெர்சே தொடங்குகிறது

bersihதேர்தல்     சீரமைப்புக்காகப்    போராடிவரும்      பெர்சே     தகுதிபெற்ற   மேலும்  பலர்   வாக்காளர்களாக    பதிவு  செய்துகொள்வதை   ஊக்குவிக்க   வாக்காளர்   பதிவு   இயக்கத்தை    மேற்கொள்ளவுள்ளது.   அவ்வியக்கம்   மார்ச்  மாதம்   முழுவதும்         தொடரும்.

“இப்போதைக்கு    வாக்காளர்களாக   பதிவு    செய்வோரின்   எண்ணிக்கை   குறைவுதான்.   மொத்தம்   4.4  மில்லியன்    குடிமக்கள்    இன்னும்  தங்களை   வாக்காளர்களாக   பதிந்து   கொள்ளவில்லை.

“ஒவ்வொரு   காலாண்டிலும்    சுமார்    180,000 தகுதிபெற்ற   மக்கள்    வாக்காளர்களாக   பதிவு   செய்துகொள்வதில்லை”,  என  பெர்சே   தலைவர்   மரியா   சின்   இன்று   பெட்டாலிங்   ஜெயாவில்    கூறினார்.

‘U Campaign’  என்றழைக்கப்படும்   இவ்வியக்கம்   மார்ச்   4-இல்,  பகாங்கின்   குவாந்தானிலும்   சாபாவின்  கோத்தா   கினாபாலுவிலும்  தொடங்கி    மார்ச்  25-ல்  பெட்டாலிங்    ஜெயாவில்    முடிவுறும்   என்றாரவர்,