அன்னிய செலாவணி இழப்புமீதான விசாரணைக்கு ஒத்துழைக்க ஸெட்டி முன்வந்தார்

bank negaraபேங்க்   நெகரா   முன்னாள்    கவர்னர்    ஸெட்டி  அக்தார்   அசிஸ்,  1990-களில்   பேங்க்    நெகாராவுக்கு    அன்னிய   நாணயச்   செலாவணி  பரிவர்த்தனையில்    ஏற்பட்டதாகக்    கூறப்படும்   ரிம10 பில்லியன்   இழப்புமீதான   விசாரணையில்   ஒத்துழைக்க   தயார்   என்று    அறிவித்துள்ளார்.

இன்று  கோலாலும்பூரில்   செய்தியாளர்களிடம்   பேசிய   ஸெட்டி,    தாம்   மத்திய     வங்கியின்   ஆளுனராக   இருந்த   16-ஆண்டுக்  காலத்தில்   இவ்விவகாரம்     எழுப்பப்பட்டதில்லை  என்றார்.

“அப்படி   எதுவும்   நிகழ்ந்துவிடக்கூடாது    என்பதற்காக   கடுமையான   நிர்வாகக்  கட்டமைப்புகள்   மத்திய   பொருளகத்தில்   உண்டு”,  என்றாரவர்.