நஸ்ரி- மகாதிர் விவாதத்துக்கு போலீஸ் அனுமதி இல்லை

debateமார்ச்   25-இல்   கோலா  கங்க்சாரில்    முன்னாள்     பிரதமர்    டாக்டர் மகாதீர்    முகம்மட்டுக்கும்   சுற்றுலா,  கலாச்சார     அமைச்சர்    நஸ்ரி    அசிசுக்குமிடையில்      நடைபெறவிருந்த   விவாதத்துக்கு    போலீஸ்   அனுமதி  கிடைக்கவில்லை.

“அந்நிகழ்வுக்கான   காரணங்களையும்    பாதுகாப்பு,  பொது  ஒழுங்கு,   பொதுமக்களின்   சுதந்திரம்    ஆகியவற்றைப்   பரிசீலித்த   பின்னர்    கோலா  கங்சார்    மாவட்ட    போலீஸ்   தலைவர்    அஹ்மட்  தெர்மிஸி   அப்ட்  ஹாக்    விண்ணப்பத்தை     நிராகரிக்க    முடிவு   செய்தார்.  அம்முடிவு    எழுத்துப்  பூர்வமாக   இன்று   விண்ணப்பதாரருக்குத்   தெரிவிக்கப்படும்”,  என    பேராக்  இடைக்கால  போலீஸ்   தலைவர்   ஹஸ்னான்   ஹசன்     ஓர்    அறிக்கையில்    தெரிவித்தார்.

பெரிய    எதிர்பார்ப்பை    ஏற்படுத்தி    இருந்த   டாக்டர் மகாதிருக்கும்    நஸ்ரிக்குமிடையிலான    அவ்விவாதம்    வரும்   சனிக்கிழமை    பிற்பகல்   கோலா  கங்சாரில்   நடைபெற  விருந்தது.