‘பாலியல் வல்லுறவில் ஈடுபட்டவரையே மணப்பதா’: எம்பியின் பேச்சால் அமைச்சர் அதிர்ச்சி

dahlanபாலியல்   வல்லுறவுக்கு   ஆளான   சிறுமிகள்    பாலியல்  வல்லுறவுக்கு
ஆளாக்கியவர்களையே   மணக்கலாம்    என்ற   கருத்து    அதிர்ச்சி   அளிப்பதாக    பிரதமர்துறை   அமைச்சர்    அப்துல்  ரஹ்மான்  டஹ்லான்  கூறினார்.   பாலியல்   வல்லுறவுக்கு   ஆளான   சிறார்கள்   மீது  மக்களவையில்   நடந்த   விவாதத்தின்போது  பிஎன்  தேசேக்  குளுகோர்  எம்பி   ஷாபுடின்  யாஹ்யாவின்    அப்படியொரு   கருத்தை   முன்வைத்தார்.

“ஒவ்வொரு  குழந்தைக்கும்   வாழவும்,  கனவு   காணவும்,  விளையாட்டாக   பொழுது  போக்கவும்   உரிமை  உண்டு.

“தங்கள்  பிள்ளைகள்  பண்பார்ந்த   சூழலில்   வளர்வதற்கு   உதவுவது  பெற்றோரின்  பொறுப்பு.  மலேசிய   குழந்தைகளின்   நலன்  காப்பது   அரசாங்கதினதும்   நாடாளுமன்ற   உறுப்பினர்களினதும்  பொறுப்பாக்கும்”,  என  ரஹ்மான்  முகநூலில்  குறிப்பிட்டிருந்தார்.