அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் 5 விழுக்காட்டு இடங்கள் வெளிநாட்டு மாணவர்களுக்கு

najibஅரசாங்க   உயர்க்  கல்விக்  கழகங்களில்   மருத்துவம்,  பல் மருத்துவம்,  மருந்தியல்  துறைகளில்      5  விழுக்காடு   இடங்களை   வெளிநாட்டு   மாணவர்களுக்குக்  கொடுக்க   அரசாங்கம்  இணக்கம்   தெரிவித்துள்ளது.

நாட்டைக்  கல்வி   மையமாக்கும்   முயற்சியின்   தொடர்பில்   இம்முடிவு     செய்யப்பட்டதாக    பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்   கூறினார்.

முன்சொன்ன  மூன்று   துறைகளிலும்     அரசாங்கப்  பல்கலைக்கழகங்கள்(ஐபிடிஏ)    5விழுக்காட்டு   இடங்களை   வெளிநாட்டு   மாணவர்களுக்கு  ஒதுக்கலாம்,    சந்தை    விகிதத்துக்கு   ஏற்ப    அவர்களுக்குக்  கட்டணம்  விதிக்கலாம்  என    நஜிப்    கூறினார்.

“நம்  நாட்டில்   போதுமான   எண்ணிக்கையில்    மருத்துவர்கள்   உள்ளனர்.  சொல்லப்போனால்,   தேவைக்கு  மேலேயே  உள்ளனர்.     இம்முடிவால்  ஐபிடிஏ  நன்மை  அடையும்.  நம்  மாணவர்களுக்கும்   வெளிநாட்டு    மாணவர்களுடன்  கலந்துறவாட   வாய்ப்பாக   அமையும்”,  என்றாரவர்.

பிரதமர்  ஆறு-நாள்   இந்தியப்  பயணத்தின்   இறுதியில்   புது  டில்லியில்  செய்தியாளர்    கூட்டமொன்றில்   பேசினார்.