சட்டம் 355 சர்ச்சை நீடிப்பதையே பிஎன் விரும்புகிறது; பண்டிகாரின் செயல்கள் அதைத்தான் காண்பிக்கின்றன

abibபாஸ்  தலைவர்   அப்துல்  ஹாடி   ஆவாங்   கொண்டுவந்த     ஷியாரியா  நீதிமன்றத்   திருத்த    சட்டவரைவுமீது   விவாதம்   நடக்காதபடி   பார்த்துக்கொண்ட   மக்களவைத்   தலைவர்  மக்களவைத்    பண்டிகார்  அமின்   மூலியாவின்    செயலானது    அவ்விவகாரம்  நீடிப்பதையே  பிஎன்  விரும்புகிறது   என்பதைக்   காண்பிப்பதாக  பிகேஆர்  தலைவர்   ஒருவர்  கூறினார்.

“1965, ஷியாரியா  நீதிமன்ற(குற்றவியல்  நீதி)ச்  சட்டம்   அல்லது   சட்டம்  355  திருத்தம்   மீதான  சர்ச்சையை    ஒரு   அரசியல்  மூலதனமாகப்  பயன்படுத்திக்  கொள்ளக்கூடாது   என்பதுதான்   எங்கள்  கருத்து. அது  சமுதாயத்தில்  அமைதியற்ற  நிலையை  உண்டாக்கி  விடும்”,  என   பிகேஆர்  இளைஞர்  பிரிவுத்  துணைத்   தலைவர்   அபிப்  பஹார்டின்  கூறினார்.

“ திருத்தங்கள்மீது   விவாதங்களுக்கு   இடந்தராமல்    நாடாளுமன்றக்  கூட்டத்தை முன்கூட்டியே   முடிவுக்குக்  கொண்டுவந்த    மக்களவைத்   தலைவர்   பண்டிகாரின்   செயலையும்  கண்டிக்கிறோம்.

“அவரது   செயல்   நீண்ட  காலத்துக்கு   சர்ச்சைகளையும்   முரண்பாடுகளையும்  உண்டாக்க    இவ்விவகாரத்தை   இழுத்துக்கொண்டே   செல்ல   பிஎன்  திட்டமிடுகிறது   என்பதற்குச்   சான்றாகும்”,  என  அபிப்  இன்று   ஓர்    அறிக்கையில்    தெரிவித்தார்.