போலீஸ் 1எம்டிபி விசாரணையை முடித்து விட்டது : அறிக்கை ஏஜி-இடம்

1mdbபோலீசார்    1எம்டிபி   மீதான    விசாரணையை   முடித்துக்கொண்டு   அறிக்கையைச்   சட்டத்துறைத்    தலைவர்    அலுவலகத்தில்   ஒப்படைத்து   விட்டது.

“சிறிது   காலத்துக்குமுன் (விசாரணையை)   முடித்தோம்”,  என  போலீஸ்  படைத்    தலைவர்     காலிட்  அபு   பக்கார்    இன்று  கோலாலும்பூரில்   கூறினார்.

1எம்டிபி-இன்  முன்னாள்   துணை  நிறுவனமான   எஸ்ஆர்சி    இண்டர்நேசனல்    மீதான  புலன்  விசாரணையை   விரைவில்  முடிக்குமாறு    சட்டத்துறைத்   தலைவர்    முகம்மட்  அபாண்டி   அலி,    மலேசிய   ஊழல்தடுப்பு    ஆணையத்துக்கு   உத்தரவிட்டிருப்பது   குறித்துக்   கருத்துரைத்தபோது   காலிட்  இவ்வாறு  கூறினார்.

ஆனால்,  போலீசார்   எஸ்ஆர்சிமீது   விசாரணை    நடத்தவில்லை    என்றாரவர்.

இதற்குமுன்பு,   போலீஸ்    பொதுக்  கணக்குக்குழு(பிஏசி)வின்    அறிக்கையை  அடிப்படையாக   வைத்து       1எம்டிபிமீது   விசாரணை    செய்து   வருவதாக  தெரிவித்திருந்தது.

2016,  ஆகஸ்டில்   அறிக்கையின்   முதல்  கட்டம்   முழுமை  பெற்று  விட்டதாக   காலிட்  கூறினார்.

பிஏசி    அறிக்கை,   மற்றவற்றோடு   அந்த  முதலீட்டு    நிறுவனத்தின்  பலவீனங்களுக்கு   1எம்டிபி   முன்னாள்   சிஇஓ   ஷாரோல்   அஸ்ரால்   ஹில்மி-தான்   பொறுப்பு     என்று  குறிப்பிட்டிருந்தது.

குட்  ஸ்டார்  நிறுவனத்துக்கு   யுஎஸ்$700 மில்லியனை   மாற்றிவிட   1எம்டிபி   இயக்குனர்   வாரியம்    அனுமதி   அளிக்க  மறுத்ததையும்    அறிக்கை   கவனப்படுத்தி   இருந்தது.  குட்  ஸ்டார்,    பினாங்கில்  பிறந்தவரான   கோடீஸ்வரர்   ஜோ   லாவுக்குச்   சொந்தமான   நிறுவனம்.

1எம்டிபி   மோசடிகளுக்கும்   பிரதமர்   நஜிப்   அப்துல்  ரசாக்குக்கும்   தொடர்புண்டு    என்றும்   கூறப்படுகிறது,  சில    தரப்புகள்    அவரது   தனிப்பட்ட   வங்கிக்  கணக்கில்    காணப்பட்ட    ரிம2.6பில்லியன்   1எம்டிபி-இலிருந்து   வந்ததுதான்    என்றும்   கூறுகின்றனர்.