ஷாரிர்: பெல்டாவுக்கா சிக்கலா? அப்படி ஒன்றுமில்லை

feldaகூட்டரசு   நில   மேம்பாட்டு   நிறுவனம்   பெரும்   சிக்கலில்   சிக்கிக்  கொண்டிருப்பதாகக்  கூறப்படுவது    உண்மையல்ல    என்கிறார்   அதன்  தலைவர்   ஷாரிர்   அப்துல்   சமட்.

பெல்டாவிடம்  ரிம22 பில்லியனுக்குச்   சொத்துகள்   இருப்பதை    அவர்   சுட்டிக்காட்டினார்.

“ரிம22 பில்லியன்  பெறுமதியுள்ள   சொத்துகள்   பெல்டாவிடம்   உள்ளன.  இது  பெருங்கொண்ட  சொத்து.

“இதனால்   தெரிவது    என்னவென்றால்,  பெல்டாவுக்குச்  சிக்கல்  ஏதும்  இல்லை. ”.  ஷாரிர்,   நேற்றிரவு   கோலாலும்பூரில்   ‘பெல்டா  எதை  நோக்கிச்  செல்கிறது’  என்ற   கருத்தரங்கில்  கலந்துகொண்டு  பேசினார்.

பெல்டாவின்  சொத்துகளில்   பெரும்பகுதி   யுகே-இல்  இருப்பதாகக்  குறிப்பிட்ட   அவர்,   அவை  பெல்டா  குடியேற்றக்காரர்களின்  பிழைப்புக்கு   நேரடியாக   உதவுவதில்லை     என்பதால்    அவற்றை  விற்றுவிடுவது  குறித்து   பரிசீலிக்கப்படுவதாகவும்   கூறினார்.