கூட்டத்தில் குழப்பம் விளைவித்ததாக ஜமால் மற்றும் ஒன்பதின்மர்மீது குற்றச்சாட்டு

jamalகடந்த  ஆண்டு   அம்பாங்கில்   பெர்சே  பேரணி   விளக்கக்  கூட்டத்தில்    கலகம்   செய்ததாக     சுங்கை  புசார்    அம்னோ    தொகுதித்   தலைவர்  ஜமால்    முகம்மட்  யூனுஸ்  மீதும்   அவரின்   ஆதரவாளர்கள்   ஒன்பது   பேர்மீதும்   அம்பாங்   செஷன்ஸ்   நீதிமன்றத்தில்   இன்று  குற்றம்    சாட்டப்பட்டது.

அவர்கள்மீது  குற்றவியல்    சட்டம்   பிரிவு   147-இன்கீழ்   குற்றம்   சாட்டப்பட்டது.  அவர்கள்மீது  குற்றம்     நிரூபிக்கப்பட்டால்   கூடின  பட்சம்  ஈராண்டுச்  சிறை  அல்லது  அபராதம்   அல்லது   இரண்டும்   சேர்த்து   விதிக்கப்படலாம்.

நவம்பர்   13-இல்,  அம்பாங்  பாயிண்ட்  விற்பனை  மையத்தில்    அவர்கள்   அக்குற்றத்தைப்   புரிந்ததாகக்  கூறப்பட்டது.

அவர்களை   ரிம3,000  பிணையில்  விடுவித்த   நீதிபதி   லுப்தி  முகம்மட்,    அவர்கள்  மீதான  வழக்கு    மே 3-இல்   விசாரணைக்கு   வரும்    என்றார்.

சம்பவம்   நடந்த    நாளில்,   அம்பாங்  பாயிண்டில்   அம்பாங்   எம்பி   ஸுரைடா  கமருடினும்   பிகேஆர்   கட்சியினரும்    பெர்சே  பேரணி  குறித்து  ஒரு  கூட்டத்தில்  விளக்கமளித்துக்  கொண்டிருந்தபோது   ஜமாலும்    அவரின்  ஆதாரவாளர்களும்   கூட்டத்தில்   புகுந்து   குழப்பம்   விளைவித்தார்கள்.   அப்போது  கைகலப்பு   ஏற்பட்டதில்   ஜமாலின்  மூக்கு  உடைபட்டு    இரத்தம்  கொட்டியது.