ஹிசாமுடின் நியமனம் ஸாகிட்டின் “ஐடியா” என்கிறார் பிரதமர் நஜிப்

 

IdeafromZahidதமது ஒன்றுவிட்ட சகோதரர் ஹிசாமுடின் ஹுசேன் பிரதமர் இலாகாவில் சிறப்புப் பணிகளுக்கான அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து வலம்வந்து கொண்டிருக்கும் ஊகங்கங்களை பிரதமர் நஜிப் நிராகரித்தார்.

துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடிக்கும் ஹிசாமுடினுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்த முயற்சிக்கும் அனைத்து தரப்பினருக்கும் பிரதமர் நஜிப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்காப்பு அமைச்சரான ஹிசாமுடினுக்கு கூடுதல் இலாகா கொடுக்க வேண்டும் என்ற “ஐடியா”வை தெரிவித்தவர் ஸாகிட்தான் என்ற தகவலை பிரதமர் நஜிப் வெளிப்படுத்தினார்.

“(சிறப்புப் பணிகளுக்கான அமைச்சர் பதவி பற்றி) நான் பல மாதங்களாக ஸாகிட்டுடன் விவாதித்துள்ளேன். அதன் பின்னர், அந்த இலாகாவை ஹிசாமுடினுக்கு அளிக்க வேண்டும் என்று ஆலோசனையை ஸாகிட்தான் அளித்தார்.

“ஆகவே தயவு செய்து, அவர்களுக்கிடையில் பிணக்கை ஏற்படுத்த வேண்டாம்” என்று நஜிப் கூறியதாக என்எஸ்டி செய்தி வெளியிட்டுள்ளது.