14ஆவது பொதுத் தேர்தல் எப்போது நடந்தாலும் வெற்றி நம்முடையதுதான், கூறுகிறார் நஜிப்

 

westillwin14 ஆவது பொதுத் தேர்தல் முன்னதாகவே நடத்தப்பட்டாலும் கூட அதை எதிர்கொள்ள பின் தயாராக இருப்பதாக பிரதமர் நஜிப் கூறினார்.

அம்னோ மற்றும் பிஎன் தலைவரான நஜிப் ரசாக் தேர்தலுக்கான நடவடிக்கைகளை அம்னோவும் பிஎன் பங்காளிக் கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன என்றும் அவற்றின் வலுவான தேர்தல் இயந்திரங்கள் வெற்றியை உறுதி செய்யும் என்று தாம் நம்புவதாக கூறினார்.

“14 ஆவது பொதுத் தேர்தல் இந்த வருடம் அல்லது அடுத்த வருடம் நடத்தப்படலாம். இந்த வருடமோ அடுத்த வருடமோ, வெற்றி பெறுவது நாம்தான். நாம் வாளை கூர்மைபடுத்தியுள்ளோம்”, என்று கோலாலம்பூர் புத்ரா உலக வாணிப மையத்தில் இன்று கூறினார்.

அந்த நிகழ்ச்சியில் பிரதமர் நஜிப்புடன் அவரது துணைவியார் ரோஸ்மா மன்சோர், துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி, அம்னோ மற்றும் பிஎன் கட்சிகளின் உயர்மட்ட தலைவர்களும் இருந்தனர்.