ஸாகிட்: தாய்மொழிப்பள்ளிகளை மூட வேண்டும் என்று நான் கூறியதே இல்லை

 

Zahidneversaidabolishநாட்டிலுள்ள தாய்மொழிப்பள்ளிகளை மூட வேண்டும் என்று தாம் எந்த ஒரு காலகட்டத்திலும் வற்புறுத்தியதே இல்லை என்று துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி இன்று தெரிவித்தார்.

அதற்கு மாறாக மலேசியாவைப் போன்ற பல்லின சமுதாயத்தில் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கு தாய்மொழிப்பள்ளிகளின் பாடத்திட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்று ஸாகிட் கூறினார்.

“தேசியக் கல்விக் கொள்கை தொடக்கப்பள்ளிகளில் தாய்மொழி ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று தெளிவாக கூறுகிறது. ஆனால், தேசிய ஒற்றுமை இலட்சியத்தை அடைவதற்கான ஒன்றுபடுத்தப்பட்ட பாடத்திட்டத்தை அது கொண்டிருக்க வேண்டும்”, என்று கோலகங்சாரில் ஸாகிட் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

நேற்று கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், தொடக்கப்பள்ளியிலிருந்து இடைநிலைப்பள்ளி வரையில் பல மொழிகளில் கற்பித்தல் அமைவுமுறை இருப்பது தேசிய ஒற்றுமை இலட்சியத்தை அடைவதற்கு ஓரளவு தடங்களாக இருக்கிறது ஸாகிட் கூறியதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

அது பற்றி கேட்ட போது, “தாய்மொழிப்பள்ளிகளை மூட வேண்டும் என்று நான் என்றுமே வற்புறுத்தியதில்லை. எனது அறிக்கைக்கு தவறான அர்த்தம் கொடுக்காதீர்”, என்றார் ஸாகிட்.