பதிவுபெற்ற அமைப்புகள் கூட்டரசு அரசமைப்பைப் பின்பற்ற வேண்டும்

rosசங்கப்   பதிவகத்தில்    பதிந்து  கொண்டுள்ள    அனைத்து   அமைப்புகளும்   கூட்டரசு   அரசமைப்பைப்   பின்பற்றி   நடந்து  கொள்ள  வேண்டும்     என  சங்கப்  பதிவக(ஆர்ஓஎஸ்)  தலைவர்    முகம்மட்   ரஸின்  அப்துல்லா   கூறினார்.

“கூட்டரசு   அரசமைப்புத்தான்   நாட்டின்   மிக   உயர்ந்தபட்ச   சட்டமாகும்.  எல்லாக்  குடிமக்களும்   அமைப்புகளும்  குறிப்பாக     அரசியல்   கட்சிகளும்   அதைப்  பின்பற்றியாக    வேண்டும்”,  என   முகம்மட்  ரஸின்   நேற்று   ஒரு    அறிக்கையில்     தெரிவித்தார்.

நாட்டில்     உள்ள    அரசியல்   கட்சிகள்    அரசமைப்பைமீறி    நடந்து  கொண்டுள்ளனவா     என்று     ஆர்ஓஎஸ்   ஆராய     வேண்டும்     என்று    பாஸ்   தலைவர்    அப்துல்   ஹாடி     ஆவாங்     கேட்டுக்கொண்டிருப்பதைச்    சுட்டிக்காட்டிய     அவர்,    மலேசிய   சங்கப்   பதிவகம்    பதிவு  பெற்ற    அமைப்புகளின்    செயல்பாட்டை   எப்போதும்    கண்காணித்துக்   கொண்டுதான்   இருக்கிறது      என்றார்.

சட்டமீறல்   நடந்திருப்பது    தெரிய   வந்தால்  சட்ட   நடவடிக்கை    எடுப்பது   குறித்து     சட்டத்துறைத்    தலைவர்    அலுவலகத்தின்   ஆலோசனை    நாடப்படும்     என்று   கூறினார்.