அம்னோவுக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் ஊழலை எதிர்த்துப் போராட எம்ஏசிசி வலியுறுத்து

macc71வது   ஆண்டு நிறைவைக்   கொண்டாடும்   அம்னோவுக்கு     வாழ்த்துத்    தெரிவித்துக்  கொண்ட  மலேசிய   ஊழல்தடுப்பு   ஆணையம்  (எம்ஏசிசி)  அக்கட்சி   ஊழலை   எதிர்த்துப்   போராட   வேண்டும்    என்று   கேட்டுக்கொண்டது.

“அதிகமான  (நாடாளுமன்ற)   இடங்களைக்  கொண்ட   கட்சி    என்ற  முறையில்,  நாட்டின்  நிர்வாகத்துக்கும்   முன்னேற்றத்துக்கும்    கொள்கைகள்   வகுப்பதில்   (அம்னோ)    தலைவர்களுக்கு  முக்கிய   பங்குண்டு”,  என  எம்ஏசிசி  ஓர்    அறிக்கையில்   கூறியது.

அம்னோ   தலைவர்கள்  நேர்மையுடன்   கடமையைச்   செய்து     ஊழல்,  அதிகாரமீறல்   போன்றவற்றிலிருந்து    விலகி  இருக்க   வேண்டும்    என்று   ஆணையம்   வலியுறுத்தியது.

“அம்னோ   தலைவர்கள்  ஊழல்,   அதிகாரமீறல்   ஆகியவற்றுக்கு   எதிராக    போராடுவதற்கு   முக்கியத்துவம்   அளித்து    நாட்டின்   நிர்வாகத்தை    மேற்கொள்ளப்போகும்    அடுத்த    தலைமுறையினருக்கு    நல்ல   முன்மாதிரியாக   விளங்க   வேண்டும்”,  என்றது   கூறிற்று.