புஜுட் தொகுதியை எதிர்க்கட்சியிடமிருந்து பின் கைப்பற்றும் என்று ஸாகிட் நம்புகிறார்

 

dpmசரவாக் மாநிலத்தில் புஜுட் சட்டமன்ற தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்பட்டால் அத்தொகுதியை எதிர்க்கட்சியிடமிருந்து பாரிசான் நேசனல் கைப்பற்றும் என்று துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி நம்பிக்கை தெரிவித்தார்.

இத்தொகுதியை பின் வெற்றி கொண்டால், சரவாக் சட்டமன்றத்தில் அதன் எண்ணிக்கை தற்போதைய 72 லிருந்து 73 க்கு உயரும் என்றாரவர்.

கடந்த மே 12 இல், சரவாக் சட்டமன்றம் அதன் டிஎபி உறுப்பினர் டிங் தியோங் சூன் இரு குடியுரிமைகள், மலேசியா மற்றும் ஆஸ்திரேலியா, பெற்றிருந்ததற்காக அவரை அம்மன்றத்தின் உறுப்பினராக இருக்கத் தகுதியற்றவர் என்று அறிவித்தது.