கோலாலும்பூர் கட்டிடங்களில் இனி கார் நிறுத்த இடம் இருக்காதா?

carகோலாலும்பூர்   மாநகராட்சி   மன்றம்    போக்குவரத்து     நெரிசலைக்  குறைக்கும்    முயற்சியாக   கட்டிடங்களில்    கார்   நிறுத்தும்    இடங்களுக்கு   அனுமதி   கொடுப்பதை    நிறுத்தி  விடலாமா  என்று   ஆலோசிப்பதாக    த   சன்   நாளேடு    நேற்று    கூறியது.

இப்போதெல்லாம்   வளர்ந்த    நாடுகளில்    நகரங்களில்   உள்ள    கட்டிடங்களில்    கார்   நிறுத்த   இடங்கள்  ஒதுக்கப்படுவதில்லை     என்று   தெரிவித்த    கூட்டரசுப்  பிரதேச   அமைச்சர்    தெங்கு   அட்னான்   தெங்கு  மன்சூர்   கோலாலும்பூரும்   அப்போக்கைப்  பின்பற்றுவது    நல்லது   என்றார்.

“தோக்கியோ,   ஹாங்காங்,    மெல்பர்ன்,  லண்டன்    போன்ற    நகரங்களில்   கட்டிடங்கள்   கட்டும்போதும்   பழைய   கட்டிடங்கள்  சீரமைக்கப்படும்போதும்    கார்   நிறுத்தும்   இடங்கள்    கட்ட   அனுமதிக்கப்படுவதில்லை.

“அவர்கள்   நகரங்களில்    கார்கள்   பயன்படுத்துவதைத்   தடுக்கப்    பார்க்கிறார்கள்.  நாமும்   அதைப்   பின்பற்றலாமா    என   ஆலோசிக்கிறோம்.அப்போதுதான்   உலகின்  மிகப்    பெரிய    நகரங்களுக்கு   இணையாக   நாமும்   விளங்க   முடியும்”,  என   தெங்கு   அட்னான்    கூறினார்.