தெனகானித்தா: மில்லியன்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்களை சட்டப்பூர்வமான தொழிலாளர்களாக்க வேண்டும்

 

legaliseforeignworkersவெளிநாட்டு தொழிலாளர்களை சட்டப்பூர்வமான தொழிலாளர்களாக்கும் புத்ராஜெயாவின் கொள்கை அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று தெனகானித்தா இன்று புத்ராஜெயாவை வலியுறுத்தியது.

இமிகிரேசன் இலாகாவின் இந்த முயற்சியை வரவேற்கிறோம் என்று கூறிய தெனகானித்தாவின் செயல்முறை இயக்குனர் குலோரீன் டாஸ், மலேசியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பதிவு செய்யப்படாத வெளிநாட்டு தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

இவ்வாரத் தொடக்கத்தில், இமிகிரேசன் இலாகா ஆயிரக்கணக்கான தற்காலிக வேலைச் சீட்டுகள், வேலை அனுமதிகள் மற்றும் தொழில் நிபுணர்கள் வருகை அனுமதிகள் ஆகியவற்றை வழங்கியது பற்றி கருத்துரைத்த குலோரீன் இவ்வாறு கூறினார்.

சட்டப்பூர்வமாக்கும் கொள்கையில் போரஸ் சிட்டி போன்ற பெரிய மேம்பாட்டு திட்டங்களில் வேலை செய்பவர்கள் மட்டுமின்றி அனைத்து வகையான தொழிலாளர்களுக்கும் இடம் அளிக்க வேண்டும் என்றாரவர்.

வெளிநாட்டுத் தொழிலாளர்களின் அவலங்களைக் களைவதற்கு அரசாங்கம் ஒரு விசாலமான வெளிநாட்டுத் தொழிலாளர் கொள்கையை உருவாக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.