கள்ளத் தொடர்பால் வெந்தது முதுகு

hospitalநேற்று  சுங்கை   பூலோவில்   கம்போங்  பாயா    ஜராஸ்   ஹிலிரில்    15  பேர்   சேர்ந்து   ஒரு   ஆடவரைத்   தாக்கியதில்   அவர்   படுகாயமடைந்தார்.

அந்த  25வயது  ஆடவரின்  முகத்திலும்   உடலிலும்   காயங்கள்   இருந்தன.   அவரது  முதுகுப்  பகுதியும்   கழுத்தும்    இடது   தோள்பட்டையும்   சுடுநீர்    ஊற்றப்பட்டதால்   வெந்து   போயிருந்தன.

தாக்குதலில்   ஈடுபட்டதாக    சந்தேகிக்கப்படும்    எழுவரை    போலீசார்   பிடித்திருப்பதாக   சுங்கை   பூலோ    போலீஸ்   தலைவர்   சுப்பிரெண்டெண்ட்   சோமு  சுப்ரமணியம்   கூறினார். மற்றவர்களையும்   போலீஸ்  நெருங்கிக்   கொண்டிருக்கிறது.

“தொடக்க     விசாரணைகளிலிருந்து   தாக்குதலுக்கு    ஆளானவர்   மணவிலக்கு   பெறும்    தருவாயில்   உள்ள     இன்னொருவரின்  மனைவியுடன்  கள்ளத்   தொடர்பு   வைத்துக்கொண்டிருந்ததாக    தெரிகிறது.  அது   தாக்குதலுக்குக்  காரணமாக   இருக்கலாம்”,  என்றாரவர்.

தாக்குதலுக்கு   ஆளானர்   சுங்கை  பூலோ   மருத்துவமனையில்     சிகிச்சை   பெற்றுவருவதாகவும்   அவரது   நிலை  திடமாக  உள்ளது     என்றும்   அவர்    சொன்னார்.

-பெர்னாமா