த ஸ்டார்மீது போலீஸ் விசாரணை

igpஆங்கில    நாளேடான    த   ஸ்டார்       தேச  நிந்தனைக்   குற்றம்    புரிந்துள்ளதா,  சமயங்களுக்கிடையில்   பகைமையைத்    தூண்டிவிட   முயன்றதா     என்று   விசாரிக்கப்பட்டு   வருகிறது.

அந்நாளிதழ்     அதன்   முன்பக்கத்தில் முஸ்லிம்கள் தொழுகை செய்யும் படத்தையும்     மலேசிய   பயங்கரவாதத்    தலைவர்    என்ற   செய்தித் தலைப்பையும்  ஒருசேர   வெளியிட்டதன்    தொடர்பில்    நிறைய    போலீஸ்     புகார்கள்     செய்யப்பட்டிருப்பதாக    இன்ஸ்பெக்டர் -ஜெனரல்    அப்    போலீஸ்   காலிட்    அபு   பக்கார்    கூறினார்.

“அதற்குப்  பொறுப்பான   அத்தனை    பேரையும்    கூப்பிட்டு    வாக்குமூலம்    பதிவு   செய்து   படத்தையும்   அப்படியொரு  தலைப்புச்   செய்தியையும்    வெளியிட்டவர்   யார்   என்பதையும்   கண்டறிவோம்”,  என  காலிட்   பெரித்தா  ஹரியான்   ஆன்லைனில்    கூறினார்.

தேச  நிந்தனைச்   சட்டம்  1948,   குற்றவியல்   சட்டம்    பிரிவு   298ஏ    ஆகியவற்றின்கீழ்    த  ஸ்டார்   விசாரிக்கப்பட்டு   வருவதாக    போலீஸ்   படைத்     தலைவர்     தெரிவித்தா