ஒரு விஐபி-இடம் கையூட்டுக்குப் பேரம்பேசியதாக நம்பபடும் நபர் கைது

arrestஒரு   விஐபி-இடம்,     விசாரணையில்  உள்ள  ஒரு   வழக்கைக்  கைவிடுவதற்குப்   பேரம்   பேசி   அதற்காகக்  கையூட்டும்  பெற்றதாக     சந்தேகிக்கப்படும்   ஓர்  ஆடவரை   மலேசிய   ஊழல்தடுப்பு    ஆணையம்   கைது     செய்துள்ளது.

54-வயதுடைய   அந்நபர்,   ரிம70,000   கொடுத்தால்   அந்த  விஐபிக்கு   எதிரான  வழக்கை   ஒன்றும்  இல்லாதபடி   செய்துவிட   முடியும்    என்று   கூறியிருந்தார்   என   எம்ஏசிசி   கூறியது.

அந்நபருடன்  அந்த  விஐபியும்  20ஆயிரம்  ரிங்கிட்டுடன்   நேற்றிரவு    தங்குவிடுதி   ஒன்றில்  கைது   செய்யப்பட்டதாக  தெரிகிறது.

அவர்கள்  கைது   செய்யப்பட்டதை    உறுதிப்படுத்திய   எம்ஏசிசி   துணை   இயக்குனர் (நடவடிக்கைகள்)  அஸாம்   பாக்கி    இது   ஒரு  கடுமையான   விவகாரம்    என்றார்.

“இப்படி  ஒரு   சம்பவம்   நிகழ்வது   இது   முதல்முறை   அல்ல.   கடந்த   காலங்களிலும்    எம்ஏசிசி   பெயரைப்   பயன்படுத்திக்  கையூட்டு    பெற   எத்தனித்த  பலருக்கு    எதிராக   எம்ஏசிசி   நடவடிக்கை    எடுத்துள்ளது”,  என்றவர்   சொன்னார்.

“இது  எம்ஏசிசி-இன்   களங்கப்படுத்தும்    செயலாகும்”,  என்று  குறிப்பிட்ட    அவர்,   எம்ஏசிசி  இப்படிப்பட்ட   விவகாரங்களில்   விட்டுக்  கொடுக்காது     என்றார்.