முஜாஹிட்: ஹராபான் இடைக்கால பிரதமர் குறித்து முடிவெடுப்பதே நடைமுறைக்கு உகந்தது

harapanஅன்வார்   இப்ராகிமின்  தலைமைத்துவம்   குறித்து   யாரும்   கேள்வி   எழுப்பவில்லை   ஆனால்,   எதிர்வரும்   பொதுத்   தேர்தலில்    பக்கத்தான்   ஹராபான்   கூட்டணிக்குத்    தலைமை    தாங்கப்   போகின்றவர்   என்பதை   முடிவு   செய்வது     அவசியமாகும்    என   பார்டி   அமனா   நெகரா  உதவித்  தலைவர்   முஜாஹிட்    யூசுப்  ராவா   கூறினார்.

பார்டி   பிரிபூமி   பெர்சத்து  மலேசியாவின்    தலைவர்களும்   ஹராபானில்   முன்னாள்   எதிரணித்    தலைவரின்   பங்களிப்பு   குறித்து   கேள்வி    எழுப்பியதில்லை    என்று   குறிப்பிட்ட   அவர்,   அன்வார்   பெற்றுத்   தந்த   வெற்றிகளைப்  பங்காளிக்   கட்சிகள்   மறந்து   விடவில்லை      என்றார்.

எதிர்க்கட்சிகளை   ஒன்றிணைத்தது,  2013  பொதுத்   தேர்தலில்    53  விழுக்காட்டு  வாக்குகளை   எதிரணிக்குப்   பெற்றுத்தந்தது    ஆகியவை    அன்வாரால்   கிட்டிய   வெற்றிகளில்    அடங்கும்.

அன்வார்  இப்போது  சிறையில்   இருப்பதால்   களத்தில்   தலைமைதாங்கப்   போகின்றவர்    யார்  என்ற  கேள்வி    எழுகின்றது.    அதனால்தான்   இடைக்காலப்  பிரதமர்   குறித்து   முடிவு   செய்ய   வேண்டியுள்ளது   என்று   முஜாஹிட்   நேற்றிரவு   பினாங்கில்   செய்தியாளர்களிடம்     தெரிவித்தார்.

ஆனால்,  தேர்தலில்  ஹராபான்   வெற்றி  பெற்றால்  முன்னாள்   பிரதமர்   டாக்டர்   மகாதிர்   முகம்மட்டை  அவரது   கட்சி    பிரதமராக    ஏற்குமா    என்ற   கேள்விக்கு   அவர்   பதிலளிக்கவில்லை.