டிஎபி எம்பி ரமதான் பஜாரிலிருந்து மீண்டும் விரட்டப்பட்டார்

 

Dapmpchasedoutநேற்று, குளுவாங் ரமதான் பஜாரில் மக்களுக்கு பேரீச்சம் பழங்களை விநியோகம் செய்து கொண்டிருந்த டிஎபி குளுவாங் நாடாளுமன்ற உறுப்பினர் லியு சின் தோங்கும் அவரது பரிவாரமும் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.

மூன்று வருடங்களில் இது லியுவுக்கு இரண்டாவது அனுபவம்.

இச்சம்பவம் சுமார் 5.45 க்கு நடந்ததாக லியுவின் உதவியாளர் ஷீக் ஒமார் அலி கூறினார்.

இளைஞர் கூட்டம் ஒன்று தங்களை சபித்ததோடு மூர்க்கத்தனமாக நடந்துகொண்டு விரட்டியடித்ததாக அவர் கூறினார்.

அதில் ஒருவர் தங்களை 2014 ஆண்டு நடந்த ரமதான் பஜாரிலிருந்து விரட்டியடித்த அதே ஆள் என்று அடையாளம் காணப்பட்டதாக அவர் கூறினார்.