போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம், நோன்புப் பெருநாளுக்குப் பின்னர்

igpஅரச    மலேசிய   போலீஸ்  தலைமையகமான   புக்கிட்   அமனானில்   எல்லாப்   பிரிவுகளையும்   சேர்ந்த    உயர்    அதிகாரிகள்   இடமாற்றம்     செய்யப்படுவார்கள்   என    அறிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்  பொருள்   குற்றப்  பிரிவில்(என்சிஐடி)   குறைந்தது   20   பேர்   ஏற்கனவே   இடமாற்றம்   செய்யப்பட்டு   விட்டதாக    இன்ஸ்பெக்டர்- ஜெனரல்   அப்   போலீஸ்   காலிட்  அபு   பக்கார்    கூறினார்.

“எல்லாப்    பிரிவுகளிலும்    உயர்நிலை   அதிகாரிகள்   பலர்   இடமாற்றம்   செய்யப்படுவார்கள்    என்பதைத்    தெரிவித்துக்கொள்கிறேன்,    நோன்புப்    பெருநாளுக்குப்   பின்னர்     அது    நடக்கலாம்”,  என்றாரவர்.

பிடிஆர்எம்-மில்     அதிகாரிகளின்   இடமாற்றம்   வழக்கமான   ஒன்றுதான்,  என்றும்   வழக்கத்துக்கு    மாறாக     எதுவும்    நடக்கவில்லை     என்றும்  காலிட்   வலியுறுத்தினார்.