தீவிரவாத இயக்கங்களுடன் சேர்ந்து சமயத்தின் புனிதத்தன்மையையும் நாட்டின் நற்தோற்றத்தையும் கலங்கப்படுத்திவிடக் கூடாது என்று முஸ்லிம்களுக்கு துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹாடி நினைவுறுத்தியுள்ளார்.
இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) போன்ற தீவிரவாத அமைப்புகளின் நடவடிக்கைகளில் ஈடுபாடு கொண்டுள்ள இந்நாட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயங்காது என்று அவர் கூறினார்.
உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டம் இப்போது இல்லையென்றாலும், நம்மிடம் ஏராளமான இதர சட்டங்கள் இருக்கின்றன. அவற்றால் இது போன்றவை நடப்பதைத் தடுக்க முடியும் என்று அவர் மேலும் கூறினார்.
தீவிரவாத இயக்கங்களால் கவரப்பட்டு அவற்றில் சேர்பவர்கள் சமய அடித்தளம் அற்றவர்கள் என்று நேற்றிரவு பெர்லிஸில் ஸாகிட் கூறினார்.
மந்திரிபுசார் அஸ்லான் மான், பிரதமர்துறை அமைச்சர் ஷாகிடான் காசிம் மற்றும் சுமார் 1,000 பேர் அவருடன் இருந்தனர்.
மிக அண்மையத் தகவல்படி, பல நாடுகளிலுள்ள இஸ்லாமிய அரசுகளில் சேர்ந்த 36 மலேசியர்கள் இதுவரையில் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஸாகிட் மேலும் கூறினார்.


























அப்படியானால், மற்ற நாடுகளால் ஏற்றுக்கொள்ளப் படாத முஸ்லீம் தீவிரவாதியான ஜாகிர் நாயக்கை நீங்கள் வரவேற்புக் கொடுப்பதின் காரணமென்ன, நோக்கமென்ன?
பேரிச்சம் பழம் கொடுக்க வந்தால் அவர்களை விரட்டி அடிக்கலாம்! அது தீவிரவாதம் அல்ல!
நம் நாட்டு அரசியல்வாதிகள் பேச்சில் மன்னர்கள்,மக்கள் வரியை கொள்ளையடிப்பதில் மன்னர்கள்,சட்டதிட்டங்களை உருவாக்குவதில் மன்னர்கள்,சனத்தொகையை அதிகரிப்பதில் மன்னர்கள்,மக்களை ஏமாற்றுவதில் மன்னர்கள் இப்படி இன்னும் பல. கடந்த 2005 ல் இலஞ்ச ஊழல் காரணமாக் அம்னோவிலிருந்து நீக்கப்பட்டவரை பெல்டா FGV ஹோல்டரிங்ஸ் க்கு தலைவராக நமது நம்பிக்கை நாயகன் நியமித்தார். இன்றைய நிலை………..? இதன் ஊழல் தொடர்பாக ஐம்பது “புள்ளிகள்” சம்பந்தப்பட்டுள்ளதாக பத்திரிக்கை அறிக்கை கூறுகிறது.எவ்வளவு கொள்ளையடித்து சேர்த்தாலும் இறுதியில் ஆறு மீட்டர் வெள்ளை துணியும்தான் சொந்தம் என்பதை எப்போது உணருவார்கள்???? ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை எமாற்றுகிறவர்கள் இருந்துக்கொண்டுதான் இருப்பார்கள்.
இவ்வட்டாரத்தில் முஸ்லிம் போராளிகள் என கொடி பிடித்ததும் ஆதரித்ததும் நீங்கள்தானே, இப்போது அவர்கள் எப்படி முஸ்லிம் தீவிரவாதிகள் ஆனார்கள் என்பதை விளக்கியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
அன்று முஸ்லிம் போராளிகள் என்று போற்றிய உங்கள்பொன்னான வாயால்,
இன்று முஸ்லிம் தீவிரவாதிகள் என்று தூற்றுவதை கேட்கும்போது,
அட! அட! அட! காதுக்கு குளிமையாக இருக்கிறது.
ஒரு முஸ்லீம் நாடான பங்களாதேஷ் ஷாக்கீர் Naik தீவிரவாதி என்று பிரகடனம் படுத்தியுள்ளபோதும்,
நீங்கள் மதபோதகர் என ஷாக்கீர் Naik-kai கட்டி அணைத்து தழுவுவதுதான் எங்கேயோ இடிக்கிறது.