1எம்டிபி மீதான விசாரணை மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்ற வழக்குரைஞர் மன்றத்தின் கோரிக்கையை அபாண்டி நிராகரித்தார்

 

ag1எம்டிபி சொத்துகள் சம்பந்தமாக அமெரிக்க நீதித்துறை (டிஒஜே) வழக்கு தாக்கல் செய்துள்ளதால், மலேசிய சட்டத்துறை தலைவர் அபாண்டி அலி 1எம்டிபி விசாரணையை மீண்டும் தொடங்குவதற்கு சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று மலேசிய வழக்குரைஞர்கள் மன்றம் விடுத்திருந்த கோரிக்கையை ஏஜி அபாண்டி நிராகரித்து விட்டார்.

மலேசிய வழக்குரைஞர்கள் மன்றத்தின் நிலைப்பாட்டில் அர்த்தம் ஏதும் இல்லை. அப்படியான நிலையில் நான் என்ன மற்றம் எப்படி கருத்து தெரிவிப்பது. அவர்கள் கேட்டுக்கொண்டதில் அர்த்தம் இல்லை என்று கூறிய ஏஜி அபாண்டி வேறு எந்த விளக்கமும் அளிக்க வில்லை.

நேற்று, மலேசிய வழக்குரைஞர் மன்றத்தின் தலைவர் ஜோர்ஜ் வர்கீஸ் சட்டத்துறை தலைவர் அபாண்டி 1எம்டிபி மீதான விசாரணை மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.