முப்தி: மலேசிய விமானங்கள் தொழுகையுடன் பயணத்தைத் தொடங்கலாமே

prayerஎல்லா  உள்ளூர்   விமான   நிறுவன  விமானங்களும்   ஒரு   தொழுகையுடன்  பயணத்தைத்  தொடங்குவது  நல்லது    என   கூட்டரசுப்   பிரதேச   முப்தி   சுல்கிப்ளி   அல்-பக்ரி   முன்மொழிந்துள்ளார்.

விமானப்   பயணங்களில்   தொழுகை    நடத்துவது   குறித்த    சர்ச்சை   குறித்துக்    கருத்துரைத்த    சுல்கிப்ளி,   ஒரு  பயணம்   தொடங்கும்போது   பயணம்   சீராகவும்   பாதுகாப்பாகவும்  அமைய    முஸ்லிம்கள்    தொழுகை   நடத்த   ஊக்குவிக்கப்படுகிறார்கள்    என்றார்.

இது     ஊக்குவிக்கப்பட    வேண்டிய   ஒரு  நல்ல   பழக்கம்.

“அதனால்,  மலேசிய   விமான   நிறுவனங்களான   மலேசியா   ஏர்லைன்ஸ்  பெர்ஹாட் (எம்ஏபி),  ஏர்   ஏசியா,   மலிண்டோ,  பயர்பிளை   ஆகியவை    தொழுகையுடன்   பயணத்தைத்   தொடங்க     வேண்டும்    என்று   பரிந்துரைக்கிறேன்”,  என்றாரவர்.