கிட் சியாங்: அன்னிய தலையீடு பற்றிப் பேசும் ஹாடி அவர்களே, சவூதி பணத்தை என்னவென்பது?

lim kitபேச்சுக்குப்   பேச்சு   அன்னிய  தலையீடு    என்று   வாதமிடும்   பாஸ்   தலைவர்      அப்துல்  ஹாடி   ஆவாங்கிடம்  டிஏபி    பெருந்  தலைவர்   லிம்  கிட்  சியாங்   ஒரு  கேல்வி   கேட்க    விரும்புகிறார்.

1எம்டிபியில்    சுருட்டப்பட்ட   பணத்தில்    வாங்கப்பட்டதாகக்   கூறப்படும்    சொத்துக்களைப்   பறிமுதல்    செய்ய    அமெரிக்க     நீதித்துறை   வழக்கு   தொடுத்தை   மலேசிய    விவகாரங்களில்    அன்னியர்   தலையீடு    என்று   கண்டித்த   பாஸ்    தலைவர்,   நேற்று,     உள்நாட்டு   விவகாரங்களில்    அன்னியர்   தலையீட்டை    வரவேற்பது    தொல்லைகளுக்குத்தான்  வழிவகுக்கும்   என்றும்     வலியுறுத்தினார்.

அன்னியர்    தலையீடு  என்ற   ஹாடியின்  வாதம்  “விந்தையாகவும்   வினோதமாகவும்”  இருப்பதாக  லிம்   கூறினார்.

அமெரிக்க   அரசாங்கத்திடமிருந்தோ    அதன்   அமைப்புகளில்   ஒன்றிடமிருந்தோ    பக்கத்தான்   ஹராபான்   தலைவர்கள்    கணக்கில்  ரிம2.6 பில்லியன்   வரவு     வைக்கப்பட்டிருந்தால்  ஹாடி   இந்நேரம்   பக்கத்தான்   ஹராபானைத்   தாக்குத்  தாக்கென்று   தாக்கியிருப்பார்.  தேசிய   இறையாண்மைக்குக்   குழிபறிக்கும்     அன்னியர்   தலையீட்டுக்கு    அது    சான்று   என்றும்    கூவியிருப்பார்.

“அதே  ஹாடி,   (பிரதமர்)   நஜிப்   அப்துல்   ரசாக்    அம்பேங்கில்     தம்  வங்கிக்  கணக்கில்    இருந்த   ரிம2.6  பில்லியன்   சவூதி   அரசக் குடும்பம்    13வது   பொதுத்   தேர்தலுக்காகக்   கொடுத்த   நன்கொடை  என்று   கூறியபோது   வாயைப்  பொத்திக்கொண்டு   இருந்தது   ஏன்?

“நன்கொடை    அமெரிக்காவிடமிருந்து   வந்தால்   அது   அன்னிய   தலையீடு  எனவே   தவறானது,  அதேவேளை    சவூதி   அராபியாவிடமிருந்து   வந்தால்    அது  நம்   இறையாண்மையை   மேன்மையுறச்   செய்யும்   எனவே   ஏற்றுக்கொள்ளத்தக்கது,  அப்படித்தானே?

“ஹாடி  ‘அன்னியர்   தலையீடு’  என்பதை   விளக்க  முற்படும்போது   இரட்டை   நியாயம்  பேசுகிறார்-  மேலை   நாடுகளிடமிருந்து   வந்தால்   தவறு  சவூதி   அராபியாவிலிருந்து   வந்தால்    அது   ஏற்றுக்கொள்ளத்தக்கது    அவருக்கு”,  என்றார்.

ஆனால்,  டிஏபி   அப்படியல்ல   என்று   வலியுறுத்திய    லிம்,    மலேசிய   விவகாரங்களில்   அன்னியர்   தலையீட்டை –  அது  யுஎஸ்ஸிடமிருந்து   வந்தாலும்   சவூதி    அராபியாவிடமிருந்து   வந்தாலும்-   டிஏபி   அதை    ஆதரிக்காது    என்றார்.