அன்வார் பிரதமர் ஆவதில் மகாதீருக்கு ஆட்சேபனை இல்லை, த கார்டியன் கூறுகிறது

MandAபிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் பிரதமராவதற்கு முன்னாள் பிரதமர் முகமட் மகாதிர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால், அதற்கு அன்வார் மாமன்னரின் மன்னிப்பைப் பெற வேண்டும்.

துணைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கி அன்வாரின் அரசியல் வளர்ச்சிக்கு தடையாக இருந்த மகாதிர், சமீபத்தில் லண்டனுக்குச் சென்றிருந்த போது த கார்டியனுக்கு அளித்த நேர்காணலில் இவ்வாறு கூறினார்.

அன்வார் விவகாரத்தில், அவர் நியாயமற்றமுறயில் நடத்தப்பட்டார் என்று நாம் வாதிக்க முடியும். நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசாங்கத்தின் செல்வாக்கிற்கு உட்பட்டிருந்தது தெளிவானதாகும். வரப் போகும் அரசாங்கம் அன்வாருக்கு முழு மன்னிப்பு வழங்கும்படி மாமன்னரை இணங்க வைக்க முடியும் என்று நான் நினைக்கிறேன் என்று மகாதிர் தெரிவித்தாக த கார்டியன் கூறுகிறது..

இப்படியானால், அன்வார் அரசியலில் பங்கேற்க முடியும் என்பதோடு பிரதமர் ஆகலாம். அதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது என்றார் மகாதிர்.