மகாதிர், அன்வார், கிட் சியாங் ஓய்வு பெற வேண்டும், கேட்கிறார் கைரி ஜமாலுடின்

 

KJanwarandkitshouldretireமகாதிர், அன்வார் மற்றும் கிட் சியாங் ஆகிய மூவரும் அரசியலிருந்து ஓய்வு பெற வேண்டும், ஏனென்றால் அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால் மக்களைத் தொடர்ந்து பிளவுபடுத்திக் கொண்டே இருப்பார்கள் என்று அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் கூறுகிறார்.

மக்கள் ஒன்றுபட வேண்டும் என்று நாங்கள் கூறினால், அவர்கள் பாரிசானை ஆதரிக்க வேண்டும் என்பதாகாது என்று கூறிய கைரி, நாட்டில் இன்று நிலவும் சூழ்நிலை நமக்கு வேண்டாம். இங்கு அரசியல் விரோதம், வெறுப்பு மற்றும் கிளர்ச்சி போன்றவற்றால் ஆட்கொள்ளப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் செய்பவர்கள் இந்த மூன்று அரசியல்வாதிகள்தான் என்று அவர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

முன்னாள் அம்னோ தலைவர்களான மாகாதீரும் அன்வாரும் தங்களுடைய சுயநலன்களுக்காக மலாய்க்காரர்களைப் பிளவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள வேளையில், கிட் சியாங் மலாய்க்காரர்களையும் சீனர்களையும் பிரிக்கிறார் என்று கைரி மேலும் கூறினார்.

இம்மூவரும் அவர்களுடைய பதவிகளை அவர்களுடைய கட்சியிலிருக்கும் இளைஞர்கள் ஏற்றுக்கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்றாரவர்.

“இளைஞர்களாகிய எங்களுக்கு அமைதியாகவும் ஆரோக்கியமாகவும் போட்டியிட ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்”, என்று கைரி வேண்டுகோள் விடுத்தார்.