நீதிபதிகள் நியமனத்தை எதிர்ப்போர் வழக்கு தொடுக்கலாம்- அஸலினா

azalinaதலைமை   நீதிபதி   முகம்மட்  ரவுஸ்    ஷரிப்பும்  முறையீட்டு   நீதிமன்ற  நீதிபதி   சுல்கிப்ளி  அஹமட்   மகினுடினும்   கூடுதல்   நீதிபதிகளாக    நியமனம்    செய்யப்பட்டது    அரசமைப்புக்கு   முரணானது   என்று  நினைப்போர்   அதை   எதிர்த்து   வழக்கு   தொடுக்கலாமே    என்கிறார்  பிரதமர்   துறை   அமைச்சர்   அஸலினா   ஒத்மான்.

“நடப்புச்  சட்டங்கள்   அதற்கு  இடமளிக்கின்றன”,  என்றாரவர்.

அந்நியமனம்  கூட்டரசு  அரசமைப்பின்   பகுதி   122(1ஏ)-க்கு  இணங்க   செய்யப்பட்டிருப்பதாக   அதைத்   தற்காத்துப்   பேசினார்    அஸலினா.

“தலைமை   நீதிபதியுடன்    ஆலோசனை   கலந்து   கூடுதல்  நீதிபதிகளை   நியமனம்    செய்ய  பேரரசருக்குத்   தனி   அதிகாரம்   உண்டு   என்பதை    அச்சட்டவிதி    தெளிவாகக்  குறிப்பிடுகிறது”,  என்றவர்  வலியுறுத்தினார்.