மகாதிர்: மலாய்க்காரர்கள் நஜிப் நினைப்பது போல் அவ்வளவு மடையர்கள் அல்ல

 

Malaysnotasstupidரொக்கமாக பணம் கொடுத்தல் மலாய்க்காரர்கள் பிரதமர் நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் பெரும் தொகை காணப்பட்டதை மறந்துவிடச் செய்யாது என்று மகாதிர் முகமட் கூறினார்.

“மலாய்க்காரர்கள் முட்டாள்கள் என்று நஜிப் நினைக்கிறார். (அவர்) மலாய்க்காரர்களுக்கு நேரடியாகப் பணம் கொடுக்கிறார் ( வங்கிக் கணக்கிலிருந்த யுஎஸ்$600 மில்லியன் என்ன ஆயிற்று என்று கேட்கமாட்டார்கள் என்ற நம்பிக்கையில்).

“ஆனால், நஜிப் நினைப்பது போல் மலாய்க்காரர்கள் அவ்வளவு முட்டாள்கள் அல்ல. காணாமல் போய்விட்ட பணம் அவர்களுடையது என்பதை அவர்கள் தெரிந்துகொண்டு விட்டனர். அந்தக் கடனை அவர்களும் அவர்களின் சந்ததிகளும் அடைக்க வேண்டும்”, என்று மகாதிர் அவரது வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

அக்கடன்களை பொதுமக்கள் உயர் வரிகள், ஜிஎஸ்டி வரி அதிகரிப்பு உட்பட, மூலம் அடைக்க வேண்டியிருக்கும் என்றும் மகாதிர் கூறினார்.