பிகேஆரின் ஸ்ரீமூடா தொகுதிக்குக் குறி வைக்கிறது பிஎஸ்எம்

psmபார்டி  சோசியலிஸ்   மலேசியாவின்  வேட்பாளர்களில்   ஒருவர்   என்று  கருதப்படும்  அப்துல்  ரசாக்   இஸ்மாயில்,  சிலாங்கூர்   ஸ்ரீமூடா    சட்டமன்றத்   தொகுதியில்   களமிறங்க   ஆர்வம்  கொண்டிருக்கிறார்.

ஸ்ரீமூடா  பல்முனைப்  போட்டிக்குரிய   தொகுதியாக    விளங்கும்   என   எதிர்பார்க்கப்படுகிறது.   அப்துல்  ரசாக்     பல்முனை  போட்டியைக்  கண்டு  கலங்கவில்லை.  அங்கு   முன்னாள் பக்கத்தான்   ஹராபான்  சகாக்களை   எதிர்க்க   வேண்டி  வந்தாலும்    அதற்கும்    அவர்   ஆயத்தமாகவே  உள்ளார் .

அவரது     வெற்றிவாய்ய்பு    குறித்து      வினவியதற்குச்   “சிறந்தவர்   வெற்றி   பெறட்டும்”  என்றார்.

இப்போது   பிகேஆரின்  சுஹாய்மி   ஷாபி   அத்தொகுதியை    வைத்துள்ளார்.  சுஹாய்மி  சிலாங்கூர்   மந்திரி  புசார்    முகம்மட்  அஸ்மின்   அலியின்    அரசியல்    செயலாளர்.