கட்கோ நிலம் எங்களுடையது- தாமரை ஹோல்டிங்ஸ்

gatcoகம்போங்   கட்கோ  பிரச்னையில்   குடியிருப்பாளர்கள்   முன்வைத்துள்ள  பல   கோரிக்கைகளுக்குத்    தாமரை   ஹோல்டிங்ஸ்   பதலளித்துள்ளது.

நேற்று  மலேசியாகினியுடனான   நேர்காணலில்,  தாமரை   ஹோல்டிங்ஸ்    சர்ச்சைக்குரிய   நிலம்    தன்னுடையது   என்று   அழுத்தமாக   வலியுறுத்தியது.

“நிலத்தின்  சொந்தக்காரரே   திருடுகிறார்  என்றால்   எப்படி?”,  என   லோட்டஸ்   குழும  தலைமை    நடவடிக்கை   அதிகாரி   இராமலிங்கம்   வினவினார்.   லோட்டஸ்    குழுமத்தின்    ஒரு  பகுதிதான்   தாமரை  ஹோடிங்ஸ்.

நேற்று,  கட்கோ   குடியிருப்பாளர்கள்  நடத்திய    செய்தியாளர்  கூட்டத்தில்,  கட்கோ   நடவடிக்கைக்   குழுச்   செயலாளர்     ஜான்  கண்டியஸ்,   பிகேஎன்என்எஸ்(நெகிரி   செம்பிலான்   மாநில   மேம்பாட்டு   நிறுவனம்)-ஸும்  தாமரை   ஹோல்டிங்ஸும்  “கூட்டுக் களவானிகள்”  என்று   குற்றம்   சாட்டியிருந்தார்.

பிகேஎன்என்எஸ்   நிலக்    குத்தகையை     மேலும்    99    ஆண்டுகளுக்கு      நீட்டிக்கொடுத்தது       என்றும்   அதற்குக்  கைமாறாக   தாமரை   1,200   ஏக்கர்   நிலத்தை   பிகேஎன்என்எஸ்-ஸுக்கு   வழங்கியது   என்றும்    அவர்   கூறினார்.

அதை  மறுத்த  ராமா,  நீதிமன்றத்தில்   வழக்கு   நிலுவையில்     உள்ளதால்  குத்தகைக்  காலம்  நீட்டிக்கப்படவில்லை   என்றார்.

“அந்த  நிலம்  அவர்களுக்கு  (குடியிருப்பாளர்களுக்கு)  இனாமாகக்  கொடுக்கப்பட்டது.  அது  பணம்   சம்பந்தப்பட்ட   ஒரு   வர்த்தக  உடன்பாடு   அல்ல.

“40-ஆண்டுக்காலப்   பிரச்னைக்குத்   தீர்வாக   நல்லெண்ணத்துடன்    அவர்களுக்குக்  கொடுக்கப்பட்டது”,  என்றார்.

மேலும்,  2004,   டிசம்பர்   2-இல்   செய்துகொள்ளப்பட்ட   விற்பனை  கொள்முதல்   ஒப்பந்தத்தின்  உட்பிரிவு  8,   “குடியிருப்பாளர்கள்  அந்த   நிலத்தில்     உரிமை  கொண்டாட   முடியாது”    என்று    கூறுவதாகவும்    அவர்    சொன்னார்.