முன்னாள் எம்பி காலிட்: அருளின் விளக்கத்தில் தெளிவு பிறந்தது

ex-mp சிலாங்கூரின்  முன்னாள்  மந்திரி    புசார்   அப்துல்   காலிட்   இப்ராகிம்,  1எம்டிபி  மேற்கொண்டுள்ள   “சீரமைப்பு”  நடவடிக்கைகள்   நல்லபடி   நடந்து   வருவதாக   நம்புகிறார்.

திங்கள்கிழமை   1எம்டிபி   சிஇஓ   அருள்கண்ட  கந்தசாமியின்  விளக்கமளிப்பைக்  கேட்ட  பின்னர்   அவர்  இம்முடிவுக்கு   வந்துள்ளார்.

“அந்த  விளக்கமளிப்பில்     அருள்   1எம்டிபியின்   நடப்பு   நிதி  நிலவரம்  குறித்து   விவரித்தார்,  வரவுசெலவு   அறிக்கையைக்  காட்டினார்.

“அதன்  முடிவில்,   இப்போதுள்ள   சொத்துகளை  வைத்து    1எம்டிபியால்   அதன்  கடன்களைச்  செலுத்த  முடியும்  ஆதாயமும்   காண  முடியும்   என்ற  நம்பிக்கை  ஏற்பட்டது”,  என   காலிட்.  காலி   பண்டார்   துன்  ரசாக்  எம்பி-யும்  ஆவார்.